ஆப்நகரம்

அசுர வேகத்தில் அரசு பேருந்து; திடீர்னு விழுந்த விபரீதம்; தெரியாமல் விழிக்கும் பெண்!

அதிவேகத்தில் சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண், தான் எப்படி விழுந்தேன் என்பதே தெரியவில்லை என்று சிகிச்சையின் போது கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Oct 2019, 8:34 am
விரைவாக செல்வதற்காக பல சமயங்களில் தனியார் பேருந்துகளை பொதுமக்கள் நாடுவது உண்டு. ஆனால் அதிவேக பயணங்களால் விபரீத நிகழ்வுகளில் கொண்டு போய் தள்ளி விடுகின்றன.
Samayam Tamil Girl Murder


எனவே அரசு பேருந்துகளே பாதுகாப்பானவை என்று கருதினால் அதிலும் பிரச்சினை. ஒழுங்காக பராமரிக்கப்படாத பேருந்துகள், தனியாருக்கு போட்டியாக பறக்கும் வேகம், ஊழியர்களின் அலட்சியமான செயல்பாடு, ஓட்டுநர், நடத்துநர்களின் அடாவடி நடவடிக்கை என பிரச்சினைகள் நீண்டு கொண்டே போகின்றன.

இந்த லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா? இன்று புரட்டி எடுக்கப் போகும் மிக கனமழை!

இதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கோகிலா(55). இவர் சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்தார்.

அப்போது பேருந்தில் அமர இருக்கை இல்லை. எனவே நின்றபடியே பயணித்துள்ளார். இந்நிலையில் கத்தேரி பைபாஸ் சாலை வளைவில் அதிவேகமாக பேருந்து செல்கையில், கோகிலா திடீரென வெளியே விழுந்தார்.

அண்ணா நகர் டவர் பார்க் கிளப் ஆக்கிரமிப்புக்கு சீல் வைப்பு

பேருந்தின் வேகத்தால் சாலையில் இழுத்து செல்லப்பட்டு கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கோகிலாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுபற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அந்த பெண், நடத்துநர் திட்டுவார் என்பதால் நான் படிக்கட்டில் நிற்கவில்லை. உள்ளே தான் நின்று கொண்டிருந்தேன்.

பல்டி அடித்து டிக் டாக் வீடியோ செய்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலி.! பதைபதைக்கும் வீடியோ

அப்புறம் எப்படி தவறி வெளியே விழுந்தேன் என்று தெரியவில்லை என்று அப்பாவியாக பதில் கூறுகிறார். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பயணிகளின் பாதுகாப்பை ஓட்டுநரும், நடத்துநரும் அவ்வப்போது உறுதி செய்து கொள்வது நல்லது.

அடுத்த செய்தி