ஆப்நகரம்

பெண் சுதந்திரம் ஒரு மில்லியன் டாலர் கேள்வி - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 3 லட்சத்து 38 ஆயிரத்டு 954 குற்றச்சம்பங்கள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு இருந்தன.

Samayam Tamil 22 Nov 2019, 10:27 pm
பெண்களுக்கான பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குள்ளாகி வரும் நிலையில், காலத்தின் நிலைக்கேற்ற கேள்வியை உயர்நீதிமன்ற மதுரை கிளை எழுப்பியுள்ளது.
Samayam Tamil mdu hc


மதுரையில் பாலியல் வழக்கில் தனக்கு வழங்கப்பட்டிருந்த இரட்டை ஆயுள் தண்டனையை குறைக்க கோரி ஈஸ்வரன் என்பவர் தொடந்திருந்தார்.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதி “காந்தியின் கருத்துப்படி, இந்தியாவில் பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனரா என்பது மில்லியன் டாலர் கேள்வி” என்று தெரிவித்துள்ளார்.

மதுரையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்னை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கியிருக்க வேண்டும்.



ஆனால், இந்த வழக்கில் உரிய வகையிலான சரியான சாட்சியங்கள் இல்லாமல் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் மனுதாரர் தண்டிக்கப்பட்டு உள்ளார் என்று கூறிய நீதிபதிகள், மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

2017 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கை 2019 ஆம் ஆண்டு வெளியானது. அதன்படி, பெண்களுக்கு எதிராக மட்டும் சுமார் 3 லட்சத்து 59 ஆயிரத்து 849 குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 குற்றச்சம்பங்கள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு இருந்தன.



இவ்வாறு, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நீதிமன்றம் இப்படி பெண் சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருப்பது யோசிக்க வேண்டிய செய்தியாக உள்ளது.

அடுத்த செய்தி