ஆப்நகரம்

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை!

ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Samayam Tamil 18 Nov 2018, 4:10 pm
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Samayam Tamil del
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பிறந்த அழகான ஆண் குழந்தை!


பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆலமியான். இவரது மனைவி ராபினா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். தம்பதிகள் இருவரும் பழனி அருகே கரியாம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் பீகாருக்கு சென்று திரும்பிய இருவரும் ஈரோட்டில் இருந்து பழனி நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். பேருந்து தாராபுரம் அருகே சென்றபோது ராபினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் பேருந்து ஓட்டுநர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனால் செல்லும் வழியிலேயே ஆலமியான் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி