ஆப்நகரம்

சென்னையில் திமுக பெண் பிரமுகர் வெட்டிகொலை

சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டையில் வீட்டின் வாசலில் திமுக பெண் பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 8 Sep 2016, 4:39 pm
சென்னை: சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டையில் வீட்டின் வாசலில் திமுக பெண் பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil woman hacked to death in chennai
சென்னையில் திமுக பெண் பிரமுகர் வெட்டிகொலை


42வது வார்டில் மகளிர் அணி உறுப்பினரான லட்சுமி என்பவர், இன்று காலை 11.30 மணியளவில் வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருந்த லட்சுமியை அடையாளம் தெரியாத 3 பேர் சுற்றி வளைத்து கொடிய ஆயுதங்களால் வெட்டியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெட்டுப்பட்டதில் கழுத்து மற்றும் தலைப் பகுதியில் பலத்த காயமடைந்த லட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து தெரியப்படவில்லை. ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் லட்சுமி கந்து வட்டித் தொழில் செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி