ஆப்நகரம்

பெண் மாவோயிஸ்ட் சென்னை நீதிமன்றத்தில் சரண்!

நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவு

Samayam Tamil 7 Dec 2018, 8:03 pm
தலைமறைவாக இருந்த பெண் மாவோயிஸ்ட் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
Samayam Tamil 66987354


தமிழகத்தில் மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்தவர் விவேக். இவருடைய மனைவி பத்மா. இவர்கள் இருவரும் ஆயுதங்களை பயன்படுத்துவதில் கை தேர்ந்தவர்கள். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதப்பயிற்சி கற்றுக்கொடுக்கும் போது போலீசார் சுற்றி வளைத்து மொத்த பேரையும் கைது செய்தனர்.

இதனையடுத்து ஜாமீனில் வெளிவந்த பத்மா கடந்த ஓராண்டாக தலைமறைவானார். இதனிடையே அவர் மீதான வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இந்நிலையில், தற்போது பத்மா பூந்தமல்லி நீதிமன்றத்தில் திடீரென்று சரணடைந்துள்ளார். அவரை கைது செய்து வரும் 18ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி பத்மாவை போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்.

அடுத்த செய்தி