ஆப்நகரம்

தனியாக வசித்து வந்த பெண் படுகொலை

தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 15 Jan 2017, 11:32 am
திருச்சி: தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil woman murdered who live alone
தனியாக வசித்து வந்த பெண் படுகொலை


பெரம்பலூர் மாவட்டம் திரணியில் விசாலாட்சி என்ற பெண் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மூன்று மகன்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொங்கல் தினத்தன்று காலையில் அவரது வீடு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் விசாலாட்சி கிடந்துள்ளார்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் அவர்கள் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், விசாலாட்சியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த கொலை சம்பவம் எதற்காக அரங்கேறியிருக்கலாம் என பல கோணங்களில் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Woman murdered who live alone

அடுத்த செய்தி