ஆப்நகரம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மருத்துவ விடுப்பில் சென்ற பெண் காவலர் தற்கொலை - மர்ம மரணத்தின் பின்னணி!

பெண் காவலர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Apr 2019, 5:15 pm
தமிழ்நாட்டில் காவலர்கள் அதிக அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றனர். இதிலிருந்து வெளியேற வழி தெரியாமல், தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.
Samayam Tamil Police Suicide


இவர்களுக்கு போதிய ஆலோசனைகள் வழங்கி, மன தைரியத்துடன் இருக்க மேலதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அமுதவள்ளி(29) என்ற பெண் காவலர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இந்நிலையில் அவரது சொந்த ஊரான புதுசெந்நெல்குளம் கிராமத்தில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வன்னியம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர்கள் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது சமூகத்திற்கு ஆபத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி