ஆப்நகரம்

திருமண பத்திரிகை கொடுக்கச்சென்ற தாய், மகன் விபத்தில் பலி

சென்னை அண்ணா சாலையில் மகளின் திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்கச் சென்ற தாய், மகன் ஆகியோா் சாலை விபத்தில் உயிாிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 25 Jul 2018, 12:19 am
சென்னை அண்ணா சாலையில் மகளின் திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்கச் சென்ற தாய், மகன் ஆகியோா் சாலை விபத்தில் உயிாிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Accident.


சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் நிா்மலா(வயது 52). அவரது மகன் மகேஷ்(22). நிா்மலாவின் மகள் ஹேமமாலினிக்கு வருகிற ஆகஸ்ட் 18ம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில் நிா்மலாவும், மகேசும் திருமணத்திற்கு பத்திாிகை வைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனா்.

சென்னை அண்ணா சாலை அருகே அமைந்துள்ள சிக்னலை மகேஷ் கடக்க முற்பட்டுள்ளாா். அப்போது எதிர் திசையில் சிக்னல் முடிவுறும் நேரம் என்பதால் தண்ணீா் லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. லாரியை கவனிக்காத மகேஷ் சாலையை கடந்துள்ளாா். தண்ணீா் லாரி என்பதால் அதனை உடனடியாக கட்டுப்படுத்த முடியாமல் லாரி மகேஷ், நிா்மலா மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிாிழந்தனா். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் பாலச்சந்திரன் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டாா். பின்னா் காவல் துறையினரை அவரை கைது செய்துள்ளனா். மேலும் இது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 போ் உயிாிழந்த சம்பவம் குடும்ப உறுப்பினா்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி