ஆப்நகரம்

அடித்து துன்புறுத்தும் கணவர்-நடவடிக்கை எடுக்க கோரி மனைவி தர்ணா!

வேலூரில் அடித்து துன்புறுத்தி கொலைமிரட்டல் விடுக்கும் கணவனை கைது செய்ய வலியுறுத்தி மனைவி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

Samayam Tamil 20 May 2019, 3:35 pm

ஹைலைட்ஸ்:

  • ஆற்காடு தாலுக்கா புங்கனூர் கிராமத்தை சேர்ந்த மெர்லின் மேரி என்ற பெண் இன்று தர்ணா
  • அடித்து துன்புறுத்தி கொலைமிரட்டல் விடுக்கும் கணவனை கைது செய்ய வலியுறுத்தி மனைவி தர்ணா
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
வேலூரில் அடித்து துன்புறுத்தி கொலைமிரட்டல் விடுக்கும் கணவனை கைது செய்ய வலியுறுத்தி மனைவி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆற்காடு தாலுக்கா புங்கனூர் கிராமத்தை சேர்ந்த மெர்லின் மேரி என்ற பெண் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில் தனது கணவர் ராஜா அமிர்த் வன சரக அலுவலராக உள்ளார் அவருக்கு எனக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறோம். இதுகுறித்து எனது கணவரிடம் விசாரணை நடத்த கோரி ராணிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் காவல்துறையினர் என் புகாரை திரும்ப பெறுமாறு மிரட்டினார்கள்.

இந்த நிலையில் என் கணவர் ராஜா அடியாட்களை ஏவி விட்டு, என்னை என் மகனையும் சரமாரியாக அடித்து உதைத்து துன்புறுத்துகிறார். என்னை கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார். ஆகவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி ராஜாவை கைது செய்ய வேண்டும் என மெர்லின் மேரி புகார் அளித்தார். கணவனை கைது செய்யக்கோரி மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி