ஆப்நகரம்

விறகு எடுக்கச் சென்ற பெண் அடித்துக் கொலை; நாட்றம்பள்ளியில் பயங்கரம்!

வேலூர்: விறகு எடுக்கச் சென்ற பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Dec 2018, 12:58 am
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்துள்ளது சுண்ணாம்புகுட்டை. இங்கும் வளர்மதி என்ற பெண் வசித்து வந்தார். இவர் நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த இரு பெண்களுடன் விறகு எடுக்கச் சென்றுள்ளார்.

பின்னர் மலைப்பகுதியில் விறகு சேகரித்துள்ளனர். அதை அடுக்கி சுமையாக கட்டிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களில் இருவர் மலையை விட்டு கீழிறங்கிச் சென்று விட்டனர்.

ஆனால் பின்னால் வளர்மதி வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வளர்மதியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

உடனே ஓடிச் சென்று பார்த்த போது, கழுத்தில் துணியால் இறுக்கிய நிலையில், முகம் முழுவதும் சிதைந்து சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து இரு பெண்களும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலைக்கான காரணம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி