ஆப்நகரம்

கருக்கலைப்பு மையம் நடத்திய பெண் கைது

திருவண்ணாமலை அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 24 Aug 2016, 4:10 pm
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil woman who ran abortion clinic at tiruvannamalai home arrested
கருக்கலைப்பு மையம் நடத்திய பெண் கைது


ஆனந்தி தமிழ்ச்செல்வி என்கிற திலகவதி(28), சோமவரகுலம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்களின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து முன்கூட்டியே தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கருக்கலைப்பிற்காக வந்திருந்த 6 கர்ப்பிணிப் பெண்களை கண்டுபிடித்தன்ர். திலகவதியின் கருக்கலைப்பு மையத்துக்கு வந்திருந்த திருமணமாகாத ஒரு பெண், அங்கு கொடுக்கப்பட்ட கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அப்பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கிருந்து, அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள், கருக்கலைப்புக்கு தேவையான உபகரணங்கள், மாத்திரைகள் உள்ளட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதே செயலில் ஈடுபட்ட திலகவதியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் போலீசார் கைது செய்ததாகவும், அபராதம் கட்டி வெளியே வந்து மீண்டும் அதே தவறை செய்துள்ளதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி