ஆப்நகரம்

45 கிலோ உரல்; சும்மா அசால்ட் காட்டிய நெல்லை பெண்கள் - தெறிக்கவிடும் வீடியோ!

பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற இளவட்ட கல் தூக்கும் போட்டியில் பெண்களும் பங்கேற்று ஆச்சரியப்படும் வகையில் சாதித்து காட்டினர்.

Samayam Tamil 21 Jan 2020, 12:06 pm
தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வெளியூர்களில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வந்திருந்தனர். பொங்கலை மகிழ்விக்கும் வண்ணம் ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டன.
Samayam Tamil Pongal 2020


இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு உற்சாகப்படுத்தப் பட்டன. இளவட்ட கல் தூக்கும் போட்டிகள் ஆண்களின் வீரத்தை பறைசாற்றும் போட்டிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஆண்களுக்கு நாங்கள் கொஞ்சம் கூட சளைத்தவர்கள் இல்லை என்று கூறும் வண்ணம் பெண்களும் சாதித்து காட்டியுள்ளனர்.

தமிழகத்தை சுடுகாடாக மாற்றாமல் விடமாட்டீங்களா மத்திய அரசே?- கொந்தளிக்கும் விவசாயிகள்!

இந்த நிகழ்வு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலிவிளை கிராமத்தில் தான் நடந்துள்ளது. அங்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில் ஒன்று பெண்களுக்கான உரல் தூக்கும் போட்டி.

இதில் இளம்பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரும் கலந்து கொண்டனர். 45 கிலோ எடை கொண்ட உரலை தூக்கி பல பெண்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.

ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?- செமயா ஏறிய பால் விலை

இதில் பத்மா என்ற பெண்ணிற்கு முதல் பரிசும், தங்கபுஷ்பம், மகாலட்சுமி ஆகிய பெண்களுக்கு இரண்டாவது பரிசும் வழங்கப்பட்டன. இதேபோல் இளைஞர்களுக்கு 129 கிலோ, 114 கிலோ பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இரண்டு முறை கழுத்தை சுற்றிய தங்கராஜ் என்பவர் முதல் பரிசையும், ஒருமுறை சுற்றிய அருண் வெங்கடேஷ் என்பவர் இரண்டாவது பரிசையும் வென்றனர். இந்த நிகழ்ச்சியில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார் பட்டி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுவே கடைசியாக இருக்கட்டும்; உயர் நீதிமன்றத்தில் செமயா வாங்கிக் கட்டிக் கொண்ட விஜயகாந்த்!

இந்த போட்டிகளை காண சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்திருந்தனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

அடுத்த செய்தி