ஆப்நகரம்

ரயில் கழிப்பறைக்குள் சிக்கிக்கொண்ட பெண் பயணியின் கால்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பெண் பயணியின் கால் கழிப்பறைக்குள் மாடிக்கொண்டதை தொடர்ந்து , அவர் காலுக்கு சேதம் ஏற்படாமல் காப்பாற்றப்படுள்ளார்.

Samayam Tamil 31 Jan 2019, 5:09 pm
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பெண் பயணியின் கால் கழிப்பறைக்குள் மாடிக்கொண்டதை தொடர்ந்து , அவர் காலுக்கு சேதம் ஏற்படாமல் காப்பாற்றப்படுள்ளார்.
Samayam Tamil c


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஹைதரபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் செவ்வாய்கிழமை மாலை 6 .10 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. பரத்தாம்மா என்ற 40 வயது பெண்மணி இந்த ரயிலில் ஏறியுள்ளார். ரயில் நிலையத்திற்கு முன்பே வந்த அவர் ரயிலின் ’வெஸ்டர்ன் கழிப்பறையை’ பயன்படுத்தி உள்ளார்.

அப்போது அவர் தடுமாறி விழவே , அவரது கால் கழிப்பறைக்குள் மாட்டிக்கொண்டது. அவர் பல முறை முயற்சித்தும் கால்யை வெளியில் எடுக்க முடியவில்லை. எப்படியோ கழிப்பறையின் கதவை திறந்த பரத்தாம்மா , உதவி வேண்டும் என்று கத்தி அழைத்துள்ளார். ரயிலில் இருந்த சகபயணிகள் உடனடியாக ரயில்வே காவல் துறையினரை அழைத்து வந்தனர்.

பரத்தாம்மாவின் நிலையை புரிந்துகொண்ட ரயில்வே காவல் துறையினர், ரயில் நிலையத்தில் உள்ள அப்பலோ அவசர சிகிச்சை மையத்தின் மருத்துவரக்ளை அழைத்து உதவி கேட்டனர்.

சுமார் 10 நிமிடங்களுக்குள் கழிப்பறையின் பாத்திரத்திற்குள் மாட்டிக்கொண்டிருந்த பரத்தாம்மா கால்யை பத்திரமாக விடுவித்தனர். இதைத்தொடர்ந்து அவரை அப்பலோ அவசர சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் 35 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.

அடுத்த செய்தி