ஆப்நகரம்

சைக்கோ கொலையாளி தஷ்வந்த மீது பெண்கள் தாக்குதல்.!

சிறுமி ஹாசினி கொலைவழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தஷ்வந்த் மீது, பெண்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

TNN 13 Dec 2017, 1:28 pm
சிறுமி ஹாசினி கொலைவழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தஷ்வந்த் மீது, பெண்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil women activists to hit murderer dhashwanth in court
சைக்கோ கொலையாளி தஷ்வந்த மீது பெண்கள் தாக்குதல்.!


சிறுமி ஹாசினி கொலைவழக்கில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தாய் சரளாவையும் கொன்றுவிட்டுத் தப்பினார். தலைமறைவான தஷ்வந்த்தை, தமிழக தனிப்படை போலீஸார் மும்பையில் கைது செய்தனர். தற்போது தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமி ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த வாரம் ஆஜராகாத காரணத்தினால் தஷ்வந்திற்கு செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து புழல் சிறையிலிருந்து அவரை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் தஷ்வந்த் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் இருந்து தஷ்வந்தை மீட்ட போலீஸார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்து ஆதரவாக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் விஜயகுமார் வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, தனது வழக்கில் தானே வாதாடுவதாக நீதிபதியிடம் தஷ்வந்த் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி, இலவச சட்ட ஆலோசனை மையத்தை நாடுமாறு அவரை அறிவுறுத்தினார். நடத்தப்பட்ட தாக்குதலை கருத்தில் கொண்டு, விசாரணை முடிந்த பிறகு, கொலையாளி தஷ்வந்த் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி