சென்னை : வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் சரமாரியாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் அருகே ஆத்தனஞ்சேரியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், தர்ஷன் (4) என்ற மகனும், ரூபிகா (3) என்ற மகளும் உள்ளனர். கோவிந்தனின் வீட்டு மாடியில் அவரது அக்கா மகள் அமுதா குடும்பத்துடன் வசித்து வருகிறார். அமுதாவின் கணவர் டெய்லர் வேலையும், அமுதா வீட்டருகில் உள்ள டாக்டர் வீட்டில் வேலை பர்க்கிறார்.
திவ்யா தனது குழந்தைகளை காலையில் பள்ளிக்கு வேன் மூலம் அனுப்புவார். மதியம் குழந்தைகளை அமுதா அழைத்து வருவது வழக்கம். நேற்று மதியம் வழக்கம் பள்ளிக்கு சென்று வந்த குழந்தைகளை அமுதா அழைத்து வந்துள்ளார். அப்போது வீட்டை திறந்து பார்த்த பொழுது, திவ்யாவை காணவில்லை. உள்ளே சென்று பார்த்தபொழுது, அவர் குளியலறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். பதறிப்போன அமுதா கூச்சலிட்டார். அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் சோதித்ததில் திவ்யா இறந்தது தெரிந்தது.
இதுகுறித்து விசாரித்த போலீசார், திவ்யாவின் முகத்தில் கையால் தாக்கிய காயமும், கழுத்தில் பலமாக அடிபட்ட காயமும் உள்ளதை பார்த்தனர். உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த கைரேகைகளை சேகரித்தனர். திவ்யா ஏன் கொலை செய்யப்பட்டார் என தீவிரமாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் அருகே ஆத்தனஞ்சேரியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், தர்ஷன் (4) என்ற மகனும், ரூபிகா (3) என்ற மகளும் உள்ளனர். கோவிந்தனின் வீட்டு மாடியில் அவரது அக்கா மகள் அமுதா குடும்பத்துடன் வசித்து வருகிறார். அமுதாவின் கணவர் டெய்லர் வேலையும், அமுதா வீட்டருகில் உள்ள டாக்டர் வீட்டில் வேலை பர்க்கிறார்.
திவ்யா தனது குழந்தைகளை காலையில் பள்ளிக்கு வேன் மூலம் அனுப்புவார். மதியம் குழந்தைகளை அமுதா அழைத்து வருவது வழக்கம். நேற்று மதியம் வழக்கம் பள்ளிக்கு சென்று வந்த குழந்தைகளை அமுதா அழைத்து வந்துள்ளார். அப்போது வீட்டை திறந்து பார்த்த பொழுது, திவ்யாவை காணவில்லை. உள்ளே சென்று பார்த்தபொழுது, அவர் குளியலறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். பதறிப்போன அமுதா கூச்சலிட்டார். அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் சோதித்ததில் திவ்யா இறந்தது தெரிந்தது.
இதுகுறித்து விசாரித்த போலீசார், திவ்யாவின் முகத்தில் கையால் தாக்கிய காயமும், கழுத்தில் பலமாக அடிபட்ட காயமும் உள்ளதை பார்த்தனர். உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த கைரேகைகளை சேகரித்தனர். திவ்யா ஏன் கொலை செய்யப்பட்டார் என தீவிரமாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.