ஆப்நகரம்

மது குடித்து போராட்டம் நடத்திய பெண்கள்

வேதாரண்யம் அருகே மதுக்கடைகளை அகற்றாததால் ஆத்திரமைடந்த பெண்கள் மது அருந்தி போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 11 Apr 2017, 6:23 pm
நாகை : வேதாரண்யம் அருகே மதுக்கடைகளை அகற்றாததால் ஆத்திரமைடந்த பெண்கள் மது குடித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil women protest against tasmac liquor shop
மது குடித்து போராட்டம் நடத்திய பெண்கள்


நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் அதிக அளவிலான விபத்துகள் நடக்கின்றன என அங்கிருக்கும் டாஸ்மாக் உள்ளிட்ட மதுக் கடைகளை அகற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நெடுஞ்சாலைகளில் இருந்த சுமார் 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதனால், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மாற்று இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைகளுக்கு அருகே கடைகள் இருக்கக் கூடாது என்பதால், மாற்று இடங்களில் அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலானவை ஊருக்குள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேதாரண்யம் அடுத்துள்ள அண்ணாப்பேட்டையில் குடியிருப்பு பகுதி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த வாரம் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மதுக்கடை அகற்றப்படாததால், ஆத்திரம் அடைந்த பெண்கள் இன்று கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே ஒப்பாரி போராட்டம் நடத்திய பெண்கள், திடீரென பாட்டில்களில் இருந்த மதுவை குடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
women protest against tasmac liquor shop

அடுத்த செய்தி