ஆப்நகரம்

செல்போன் டவர் மீது ஏறி சகோதரிகள் போராட்டம்!

தூத்துக்குடியில், சண்முகசுந்தரி, என்பவர் தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார் . இவருடன் இவரது சகோதரியும் சேர்ந்து செல் போன் டவரில் ஏறி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 5 Feb 2019, 12:28 pm
தூத்துக்குடியில், சண்முகசுந்தரி, என்பவர் தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார் . இவருடன் இவரது சகோதரியும் சேர்ந்து செல் போன் டவரில் ஏறி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil koko


தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரி. இவர் தனது கணவரிடம் ஏற்பட்டகருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

மனம்மாறிய சண்முகசுந்தரி தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இவரது புகார் மனுவை ஏற்க நாசரேத் காவல் நிலைய காவல் துறையினர் மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த சண்முகசுந்தரி, சாத்தான்குளம் பேருந்து நிலையம் அருகே உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார்

மேலும் இவரது சகோதரியும் இவருடன் சேர்ந்துகொண்டு செல் போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி போராட்டம் நடத்தினர். இதனால்சாத்தான்குளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி