ஆப்நகரம்

அ.தி.மு.க. எம்.பி. மீது இளம்பெண் பாலியல் குற்றச்சாட்டு

தன்னை ஏமாற்றியதாக அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜா மற்றும் அவரது மகன் மீது இளம் பெண் புகார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Apr 2018, 4:36 pm
தன்னை ஏமாற்றியதாக அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜா மற்றும் அவரது மகன் மீது இளம் பெண் புகார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Anvar


அ.தி.மு.க. எம்.பி. அன்வா் ராஜாவின் மகன் நாசா் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக இளம்பெண் ரெபினா கால் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இதுகுறித்து ரெபினா நிருபர்களிடம் கூறுகையில்: அன்வர்ராஜா மகன் நாசர் என்னை காதலித்து அவரது குடும்பத்தார் முன்னிலையில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டாா். அதன் பின்னர் 1 வருடம் நானும் அவரும் சென்னையில் வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக என்னுடன் தொடர்பை துண்டித்து கொண்டு வேறு பெண்ணுடன் அவரது குடும்பத்தார் கல்யாணம் செய்து வைக்கவுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து அவரது தந்தை அன்வர்ராஜாவை நேரில் சந்தித்து முறையிட்டேன். ஆனால் அவரும் என்மகன் இல்லையென்றால் பரவாயில்லை, நான் உன்னை பார்த்து கொள்கிறேன் என தவறான வார்த்தைகளை கூறினார்.

அன்வர் மகன் மீது சிவகங்கை, காரைக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஆளுநரை பார்க்க சென்றால் வெளியிலேயே என்னை போலீஸ் தடுத்து கைது செய்தனர். அன்வர் ராஜா எம்பி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி என்னை மிரட்டி வருகிறார்.

தற்போது வக்பு வாரிய தலைவர் பதவிக்கும் போட்டியிடவுள்ளார். ஏற்கனவே இவர் மீதும் இவரது மகன் மீதும் பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் இஸ்லாமிய மக்களுக்குஎன்ன நியாயம், நல்லதை செய்ய முடியும். ஆகவே அன்வர் ராஜா எம்பி மீதும் அவரது மகன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த செய்தி