திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்க வேண்டிய கட்டாயமில்லை என தெரிவித்த பின்னரும் தமிழக திரையரங்குகளில் தொடர்ந்து இசைக்கப்பட்டு வருவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து, நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நிறுத்தப்பட்டது. ஆனால், தமிழக திரையரங்குகளில் மட்டும் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பதிலளித்த திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், “படம் பார்க்க வருபவர்களுக்கு தேசப்பற்றை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே தேசிய கீதம் தொடர்ந்து இசைக்கப்படுகிறது. திரையரங்கு உரிமையாளர்கள் வேண்டுமென்றால் இசைக்காமல் இருக்கலாம். ஆனால், யாருக்கும் அந்த எண்ணம் இல்லை என கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன், உச்சநீதிமன்றம் ஒரு நிலையான தீர்ப்பை வழங்காததால்தான் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கபடுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் கூறுகையில், தேவையற்ற இடங்களில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் அழுத்தத்தினால் திரையரங்கு உரிமையாளர்கள் பயத்தில் உள்ளதாகவும், அதனால்தான் தேசியகீதம் தொடர்ந்து இசைக்கப்படுவதாகவும் கருத்து நிலவிவருகிறது.
திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து, நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது நிறுத்தப்பட்டது. ஆனால், தமிழக திரையரங்குகளில் மட்டும் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பதிலளித்த திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், “படம் பார்க்க வருபவர்களுக்கு தேசப்பற்றை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே தேசிய கீதம் தொடர்ந்து இசைக்கப்படுகிறது. திரையரங்கு உரிமையாளர்கள் வேண்டுமென்றால் இசைக்காமல் இருக்கலாம். ஆனால், யாருக்கும் அந்த எண்ணம் இல்லை என கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், திரைப்பட இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன், உச்சநீதிமன்றம் ஒரு நிலையான தீர்ப்பை வழங்காததால்தான் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கபடுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் கூறுகையில், தேவையற்ற இடங்களில் தேசிய கீதத்தை இசைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் அழுத்தத்தினால் திரையரங்கு உரிமையாளர்கள் பயத்தில் உள்ளதாகவும், அதனால்தான் தேசியகீதம் தொடர்ந்து இசைக்கப்படுவதாகவும் கருத்து நிலவிவருகிறது.