ஆப்நகரம்

புத்தாண்டு தினத்தில் பைக்ரேசில் ஈடுபட்டால் பாஸ்போா்ட் கிடையாது – காவல்துறை அதிரடி

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸ் உட்பட விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு பாஸ்போா்ட் பெற வழங்கப்படும் தடையில்லை சான்று தரப்படாது என்று சென்னை காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

TOI Contributor 28 Dec 2017, 3:17 am
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸ் உட்பட விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு பாஸ்போா்ட் பெற வழங்கப்படும் தடையில்லை சான்று தரப்படாது என்று சென்னை காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
Samayam Tamil wont get passport clearance if anyone attempt bike race on new year 2018 chennai police
புத்தாண்டு தினத்தில் பைக்ரேசில் ஈடுபட்டால் பாஸ்போா்ட் கிடையாது – காவல்துறை அதிரடி


சென்னையில் கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பல்வேறு வாகன விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு அத்தகைய உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், சென்னை மாநகர காவல்துறை பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வருகிற 31 ம் தேதி, இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை, மெரினா கடற்கரையை ஒட்டிய சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் வாகனம் ஓட்டினாலோ, பைக் ரேசியில் ஈடுபட்டாலோ, அவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது தடையில்லாச் சான்று வழங்கப்படாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால், அவர்களது வாழ்நாள் முழுவதும் பாஸ்போர்ட் வாங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னை மாநகர் முழுவதும் 176 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் எனவும், 3 ஆயிரத்து 500 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி