ஆப்நகரம்

தமிழர்கள் அடையாளத்தை இழந்து வாழ முடியாது: இளைஞர்கள் ஆவேசம்

தமிழர்கள் அடையாளத்தை இழந்து வாழ முடியாது என்று இளைஞர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர்.

TNN 20 Jan 2017, 11:05 am
சென்னை: தமிழர்கள் அடையாளத்தை இழந்து வாழ முடியாது என்று இளைஞர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர்.
Samayam Tamil wont live without our tamil culture says jallikattu protest youths
தமிழர்கள் அடையாளத்தை இழந்து வாழ முடியாது: இளைஞர்கள் ஆவேசம்


உச்சநீதிமன்ற தடை காரணமாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இதையடுத்து இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, முழு கடையடைப்பு நடந்து வருகிறது.

இதற்கிடையில் டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்தித்து அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தினார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி, காத்திருக்குமாறு கூறினார். இன்று காலை தமிழகம் திரும்பிய முதலமைச்சர், அவசர சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், தமிழர்களின் கலாச்சாரத்தை, அடையாளைத்தை இழந்து வாழ முடியாது என்று கூறியுள்ளனர். ஜல்லிக்கட்டு என்பது தங்கள் பாரம்பரியம் என்றும், அதனை நடத்த அவசர சட்டம் இயற்றினால் மட்டுமே போராட்டம் கைவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Won't live without our tamil culture says Jallikattu protest youths.

அடுத்த செய்தி