ஆப்நகரம்

அரசு பேருந்துகளில் சிறப்பு திட்டம் - அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்

சென்னை மாநகர பேருந்துகளில் சிசிடிவி பொருத்தும் பணிகள் நவம்பரில் முடிக்கப்படும் என்று அமைச்சர் தகவல்

Samayam Tamil 3 Aug 2021, 3:44 pm
தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. கூடுதலாக, மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
Samayam Tamil கோப்புப்படம்


இந்நிலையில் மேற்கண்ட மூன்று பேரும் இலவசமாக பயணிப்பதாக கட்டணமில்லா பயண சீட்டுகளும் பேருந்துகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் எத்தனை பேர் பயனடைகின்றனர் என்பதை தெரிந்துகொள்ள முடியும் என்றும் அரசு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், மே 8 முதல் அமலுக்கு வந்த இந்த திட்டத்தின் மூலம் இதுவரை தமிழகத்தில் 6.58 பெண்கள் பயனடைந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார். மேலும், நாள் ஒன்றுக்கு சாதாரண கட்டண நகர பேருந்துகளில் இலவசமாக 30 லட்சம் பெண்கள் பயணித்து பயன் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களுக்கு இலவச கட்டண சேவையை வழங்க ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஓ. பன்னீர்செல்வம் கூறிய குற்றசாட்டை அமைச்சர் மறுத்துள்ளார். மேலும், 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டிக்கெட் அதே விலைக்குத்தான் விற்பனை செய்யப்படுவதாகவும், எங்கும் 10 ரூபாய்க்கு அது விற்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.

கோவை மக்களுக்கு நன்றி, கோவை தெற்கிற்கு வணக்கம் : கமல் சூசகம்

கட்டணமில்லா பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் எண்ணிக்கை 60 சசதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் நிர்பயா திட்டம் மூலம் மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நவம்பர் மாதத்தில் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக தமிழகத்தில் நிர்பயா திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் உள்ள 2,500 பேருந்துகளில் ரூ.71 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி