ஆப்நகரம்

உலக கேரம் போட்டியில் 2 வெள்ளி பதக்கம் வென்ற தமிழ் வீரர்!

தென்கொரியாவில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் சகாயபாரதி இரண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

Samayam Tamil 12 Sep 2018, 11:14 am
தென்கொரியாவில் நடைபெற்ற உலககேரம்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் சகாயபாரதி இரண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
Samayam Tamil s-l1000


தென்கொரியாவில் உள்ள சியோல் நகரில் சமீபத்தில் 5வதுகேரம் உலக கோப்பை தொடர் நடைபெற்றது.இதில் சென்னை வண்ணார்ப்பேட்டையைச் சேர்ந்த38வயதான கே. சகாயபாரதி, அணிகள் பிரிவிலும், ஓபன் டபுள்ஸ் பிரிவிலும் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்தத் தொடரில் இந்திய அணியில் தமிழகத்தில் இருந்து சகாயபாரதி மட்டுமே இடம் பெற்றிருந்தார். இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் அவர்,4வதுஇடத்தில்உள்ளார்.

ஓபன் டபுள்ஸ் இறுதிப் பேட்டியில் சகாயபாரதி, ஜாகிர் பாஷா ஜோடி சகநாட்டைச் சேர்ந்தரியாஸ் அக்பர் அலி, பிரசாந்த் மோரே ஜோடியிடம் 25-4, 5-25 , 13-25என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

அணிகள் பிரிவில் சகாய பாரதி, பிரசாத் மோரே, ஜாகீர் பாஷா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 1-2 என்ற கணக்கில் இலங்கையிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.

இதில் ஜாகிர் பாஷா முதல் ஆட்டத்தில்வெற்றி பெற்ற நிலையில் அடுத்த இரு ஆட்டங்களிலும் சகாயபாரதி, பிரசாத் மோரே ஆகியோர் வெற்றியை வசப்படுத்தத் தவறினர்.

அடுத்த செய்தி