ஆப்நகரம்

உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவங்கியது!

தமிழர்களின் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவங்கியது.

TOI Contributor 10 Feb 2017, 8:18 am
அலங்காநல்லூர்: தமிழர்களின் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவங்கியது.
Samayam Tamil world famous allananallur jallikattu started
உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துவங்கியது!


கடந்த இரண்டு ஆண்டுகளாக கோர்ட் தடையால், நடக்காத ஜல்லிக்கட்டு போட்டி மெரினாவில் இளைஞர் நடந்திய மாபெரும் போராட்டத்தால் மீட்டு எடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு பகுதிகளாக நடந்தது.

இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று துவங்கியது. மதுரை கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார். இதற்கு முன்பாக மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின் விழா குழு சார்பில் உயர் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் இலங்கையிலிருந்து 3 காளைகள் பங்கேற்கவுள்ளது.

அடுத்த செய்தி