ஆப்நகரம்

உலகின் மிக உயர சிவலிங்கம் கேரளாவில் திறப்பு!

இந்தியா புக் ஆப் ரெகார்ட் மற்றும் ஆசியா புக் ஆப் ரெகார்ட்டில் இடம்பெற்றுள்ள சிவலிங்கம் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Nov 2019, 5:57 pm
திருவனந்தபுரம்: உலகின் மிக உயரமான சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டுக்காக கேரளாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil வழிபாட்டுக்கு திறக்கப்பட்டுள்ள சிவலிங்கம்
வழிபாட்டுக்கு திறக்கப்பட்டுள்ள சிவலிங்கம்


தமிழகம் மற்றும் கேரள எல்லையில் கன்னியாகுமரி மாவட்டம் அருகே அமைந்துள்ள செங்கல் என்ற இடத்தில் சிவபார்வதி ஆலயத்தில் ரூ.10 கோடி மதிப்பில் 111.2 அடி உயரத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

ராம அவதாரத்தின் பின்னால் மனிதனுக்கு உணர்த்தும் நீதியும் குறிக்கோளும் என்னனு தெரியுமா?

2012ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இதன் கட்டுமான பணிகளை சுமார் 800 பணியாளர்கள் ஆலயத்திலேயே தங்கி நிறைவு செய்தனர். இந்தியா புக் ஆப் ரெகார்ட் மற்றும் ஆசியா புக் ஆப் ரெகார்ட்டில் இடம் பெற்றுள்ள இந்த சிவலிங்கத்தை பொது மக்கள் வழிபாட்டுக்கு மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் இன்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வழிபடுவதால் ஐஸ்வர்யம் பெருகும்...?

சிவலிங்கத்தின் உள் பகுதியில் 8 தளங்கள் உள்ளன. கீழ் தளத்தில் பக்தர்களுக்கு நேரடியாக அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் ஒரு சிவலிங்கமும், மற்ற 7 தளங்களில் 108 சிவலிங்கங்களும், மேல் தளமான 8ஆவது தளத்தில் கைலாய மலையில் சிவ பார்வதி அமர்ந்திருக்கும் புராண வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிவலிங்கத்தை பார்வையிட்டு வழிபட்டு செல்கின்றனர்.

அடுத்த செய்தி