ஆப்நகரம்

பிரியாணியில் நெளிந்த புழுக்கள்... வாடிக்கையாளர் அதிர்ச்சி...!!

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் பறிமாறப்பட்ட பிரியாணியில் புழு நெளிந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 16 Oct 2019, 1:34 pm
சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் இருக்கும் ஒரு உணவகத்தில் சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகள் பறிமாறப்படுகிறது. இங்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அதில் புழுக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Samayam Tamil Chicken Spice


இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். சுகாதாரமற்ற முறையில் பிரியாணி தயாரித்தது தவறு என்பதை ஒப்புக் கொள்ளாமல், வேறு உணவு தருவதாக கூறியதாகத் தெரிகிறது.

பிரபல ஹோட்டலில் வழங்கப்பட்ட பிரியாணியில் ரத்தக்கறையுடன் பேண்டேஜ்

இதையடுத்து, பாதிப்படைந்த வாடிக்கையாளர் சிக்கன் பிரியாணியை படம் பிடித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு அனுப்பி, புகாரும் அளித்துள்ளார்.

பிரியாணியில் பல்லி விழுந்திருப்பதாக நாடகமாடி பணம் பறிக்க முயன்ற முதியவர் கைது!

கோழி இறைச்சி விற்ற கடைதான் இதற்குக் காரணம் என்று அந்தக் கடை மீது திருநின்றவூர் காவல்நிலையத்தில் உணவகம் சார்பில் புகார் அளித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைனில் பிரியாணி புக் செய்த பெண்: ரூ.40 ஆயிரம் பறிபோன பரிதாபம்

பழைய இறைச்சிகளை வாங்கி ஓட்டலில் பிரியாணி செய்வதால்தான் இதுபோன்ற தவறுகள் நடக்கிறது என்று வாடிக்கையாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

அடுத்த செய்தி