ஆப்நகரம்

கோதுமை மாவில் நெளிந்த புழுக்கள்... வாடிக்கையாளர் அதிர்ச்சி!!

கடையில் வாங்கிய கோதுமை மாவில் புழுக்கள் நெளிவதை கண்டு அதிர்ச்சியடைந்த நபர், இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 12 Jul 2020, 4:03 pm
இட்லி, தோசை மாவையே கடைகளில் ரெடிமேட்டாக வாங்கும் பழக்கம் நம் மக்களிடம் அதிகரித்து வரும் நிலையில், கோதுமை மாவை பெரும்பாலோர் கடைகளில்தான் தான் வாங்குகிறார்கள் என்பதை சொல்லவா வேண்டும்?
Samayam Tamil wheat


அதாவது கோதுமையை ரேஷனிலோ, வெளிச்சந்தையிலோ வாங்கி, அதனை மில்லில் அரைத்து மாவாக்கி, அதனை சப்பாத்தி, பூரி தயாரிக்க பயன்படுத்துவோரை விட, கோதுமை மாவை கடையில் ரெடிமேடாக வாங்கி, உணவு தயாரிக்க பயன்படுத்துவோரின் எண்ணிக்கைதான் நம் ஊரில் அதிகம்.காஞ்சிபுரம் மக்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

காஞ்சிபுரம் மாநகரைச் சேர்ந்த நபர் ஒருவர், தமது குடியிருப்புப் பகுதியில் ஒரு மளிகைக் கடையில் சில தினங்களுக்கு முன் கோதுமை மாவு பாக்கெட்களை வாங்கியுள்ளார். அதனைக் கொண்டு சப்பாத்தி தயாரித்து சாப்பிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வாந்தி, மயக்கம் என பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

15 அடி ராஜ நாகத்தை கைகளில் பிடித்து, மடித்துச் சென்ற வனத்துறை!

இதையடுத்து, கடையில் வாங்கிய கோதுமை மாவை சல்லடையில் கொட்டி ஜலித்து பார்த்தபோது, சல்லடையில் புழுக்கள் நெளிந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது, தங்களது கடையில் கோதுமை மாவு போதிய அளவு கையிருப்பு உள்ளதாகவும், காலாவதியான மாவை தாங்கள் விற்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

அவரது பதிலில் திருப்தியடையாத பாதிக்கப்பட்ட நபர், இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார் அதன் பெயரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி