ஆப்நகரம்

திருவல்லிகேணி மருத்துவமனையில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை

திருவல்லிகேணி அரசு மருத்துவமனையில் கட்டி இருந்த பெண்ணுக்கு கர்ப்பமாக இருக்கிறார் என கூறி தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 23 Nov 2016, 12:57 pm
திருவல்லிகேணி அரசு மருத்துவமனையில் கட்டி இருந்த பெண்ணுக்கு கர்ப்பமாக இருக்கிறார் என கூறி தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil worng treatment given to a women in govt hospital
திருவல்லிகேணி மருத்துவமனையில் பெண்ணுக்கு தவறான சிகிச்சை


சென்னை கண்ணகி நகர் பகுதியில் வசித்துவருபவர் அமீர்அலி ( 29). இவருடைய மனைவி அசீனா (28). இந்த தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பேறு இல்லை. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அசீனா ருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு தாய்-சேய் நல அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார் .

அசீனாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் கர்ப்பமாக இருப்பதாக , கர்ப்பத்துடன் கட்டி ஒன்று வளர்வதாகவும், எனவே அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டியது இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

இதனைதொடர்ந்து அவர் மாதந்தோறும் மகப்பேறு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசீனாவுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டு உள்ளது. அது குழந்தை பேறுக்கான இடுப்பு வலி என்று கருதி அசீனா தனது கணவருடன் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த தனியார் மருத்துவனை டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இல்லை என்றும் , கட்டி மட்டுமே உள்ளது என்றும் ஆதாரப்பூர்மாக நிருபித்தனர். . இதுகுறித்து சிகிச்சை அளித்த அரசு டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியத்துடன் பதில் அளித்து அவர்களை வெளியேற்றி விட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி