ஆப்நகரம்

தஞ்சை பெரிய கோயிலில் ஓங்கி ஒலித்த தமிழ்!

தஞ்சை பெரிய கோயிலில் நேற்று தமிழில் வழிபாடு நடைபெற்றது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Samayam Tamil 27 Oct 2020, 6:23 am
தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் பிறந்த நாளான ஐப்பசி சதய நட்சத்திரமான நேற்று, 1035ஆவது சதய விழா நேற்று நடைபெற்றது.
Samayam Tamil Tanjore Big Temple sathaya vizha


கொரோனா பரவல் காரணமாக மார்ச் 18ஆம் தேதி முதலே தஞ்சை பெரிய கோயிலில் பொது மக்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மிகவும் பிரசித்திப் பெற்ற சித்திரைத் திருவிழாவும் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் பொது முடக்கத்தில் விதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் காரணமாக கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் சதய விழாவிற்கு, கொரோனா பரவல் காரணமாகச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தமிழக அரசு அனுமதி வழங்கியது. பொதுவாக இரு நாட்கள் கொண்டாடப்படும் விழா இம்முறை ஒரு நாள் மட்டுமே நடத்தப்படுவதாகச் சதய விழாக்குழு தலைவர் துரை திருஞானம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

உதயநிதி வேகத்துக்கு பிரேக் போடும் பிகே டீம்: ஓகே சொன்ன ஸ்டாலின்

அதன்படி நேற்று காலை பெரிய கோயிலில் மங்கல இசையோடு சதய விழா நிகழ்ச்சி தொடங்கியது. கோயில் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டது. தேவாரம் நூலுக்கு ஓதுவார்கள் சிறப்புப் பூஜைகள் செய்து கோயிலின் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து நந்தி மண்டபம் அருகே அமர்ந்து தமிழில் தேவாரம் பாடினர்.

பல்வேறு அமைப்புகள், கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று பெரிய கோயிலில் தமிழில் அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?

இதனிடையே கோயிலின் வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்குத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சில மாதங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோயிலில் உயர் நீதிமன்ற உத்தரவின் படி தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி