ஆப்நகரம்

தனியார் மருத்துவரின் அலட்சியத்தால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

மதுரையைச் சேர்ந்த ஜே. சூர்ய மேரி என்ற ஒரு மைனர் பெண் கடந்த 2009ம் ஆண்டு சந்திரா பாய் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் சுந்தர் ராஜனிடம் தொண்டை தொற்றுக்கு சிகிச்சை பெற வந்தார்.

Samayam Tamil 11 Feb 2019, 6:05 pm
Samayam Tamil arrest
மதுரையைச் சேர்ந்த ஜே. சூர்ய மேரி என்ற ஒரு மைனர் பெண் கடந்த 2009ம் ஆண்டு சந்திரா பாய் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் சுந்தர் ராஜனிடம் தொண்டை தொற்றுக்கு சிகிச்சை பெற வந்தார்.

மருத்துவர் அறிவுரையின் பேரில் சூர்ய மேரிக்கு அவரது பின்புறத்தில் ஊசி போடப்பட்டது. இதனால் அவரது பின்புறத்தில் அதீத வலி ஏற்பட்டது. பின்னர் அங்கு புண் ஏற்பட்டது. இது மற்ற உடற்பாகங்களுக்கும் பரவத் துவங்கியது. இதனை அடுத்த மேரி டாக்டர் சுந்தரை மீண்டும் அணுகி விஷயத்தை தெரிவித்தார்.

பின்புறத்தில் சிறு அறுவை சிகிச்சை செய்தால் தான் தொற்று நீங்கும் என்றார் அவர். பின்னர் அவருக்கு மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. அப்போது தொற்று பரவுவது நிற்கவில்லை. மற்றொரு மருத்துவமனையில் மேரிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் குணமானார்.

இதனை அடுத்து மேரி டாக்டர் சுந்தரிடம் ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். District consumer disputes redressal forum (DCDRF)-ன் மதுரை கிளை மேரி அனுபவித்த வேதனைக்களுக்கு ஈடாக ரூ. 85,000 நஷ்ட ஈடு வழங்க டாக்டர் சுந்தரிக்கு உத்தரவிட்டது.

அடுத்த செய்தி