ஆப்நகரம்

ஏலத்துக்கு வந்த மதுவந்தி வீடு: தொகையை நிர்ணயித்த ஃபைனான்ஸ் கம்பெனி!

மதுவந்தியின் வீட்டை ஏலத்தில் விற்பனைக்கு விடுவதாக நிதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Samayam Tamil 24 Oct 2021, 2:14 pm

ஹைலைட்ஸ்:

  • 2016 ஆம் ஆண்டு இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ரூ.1 கோடி கடனாக பெற்றுள்ளார்
  • மதுவந்தி பணம் கட்டாமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது
  • வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் நிதி நிறுவனத்திடம் வீட்டின் சாவியை ஒப்படைத்தனர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மதுவந்தி
மதுவந்தி
பாஜகவின் செயற்குழு உறுப்பினரும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2ஆவது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மென்டில் உள்ள சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்த வீட்டை வாங்குவதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ரூ.1 கோடி கடனாக பெற்றுள்ளார். வீட்டை வாங்கிய பிறகு சில தவணைகள் மட்டும் வட்டி கட்டி அதன் பின்னர் தவணை பணம் கட்டாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நிதி நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக தவணையை கட்ட சொல்லியும் மதுவந்தி பணம் கட்டாமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. வங்கி அதிகாரிகள் வட்டிப்பணத்துடன் அசலையும் சேர்த்து ரூ 1,21,28,384 கோடி பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், உரிய பதிலை மதுவந்தி அளிக்காததால், மெட்ரோ பாலிட்டன்- அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு நிதி நிறுவனத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவரது வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் நிதி நிறுவனத்திடம் வீட்டின் சாவியை ஒப்படைத்தனர்.

ஏல அறிவிப்பு


இந்த நிலையில், மதுவந்தியின் வீட்டை ஏலத்தில் விற்பனைக்கு விடுவதாக இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவன அறிவிப்பு வெளியிட்டு, ஏலத்தில் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. அதில், ஏலத்தில் பங்குபெற வைப்பு தொகையாக ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் என்றும், ஏலத்துக்கு வரும் சொத்தின் அடிப்படை தொகை ரூ.1,50,00,000 கோடி என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுவந்தியின் வீட்டுக்கு, கடந்த 16ஆம் தேதி நிலவரப்படி, வட்டியுடன் சேர்த்து கடன் நிலுவைத் தொகை ரூ.2,02,81,223 கோடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி