ஆப்நகரம்

கமல்ஹாசன் உடன் யோகேந்திர யாதவ் சந்திப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை இந்திய சுயராஜ்ஜிய கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று சந்தித்தார்.

Samayam Tamil 10 Sep 2018, 4:37 pm
Samayam Tamil index
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை இந்திய சுயராஜ்ஜிய கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் இன்று சந்தித்தார்.

சென்னை – சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை சந்திக்க வந்த செப்டம்பர் 8ஆம் தேதி தமிழகம் வந்த யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டார். அவர் விவசாயிகளை சந்தித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்பதால் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, யோகேந்திர யாதவ் கைதுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், கமல்ஹாசனை இன்று நேரில் சந்தித்த யோகேந்திர யாதவ், தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக கருத்து தெரிவித்ததற்கு நன்றி கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

அடுத்த செய்தி