ஆப்நகரம்

Chinmayi Sripada: சின்மயி என் மீது வழக்கு தொடரலாம், சந்திக்க தயார்: வைரமுத்து

பாடகி சின்மயி என்மீது பாலியல் வழக்கு தொடரந்தால் சந்திக்க தயராக உள்ளேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

Samayam Tamil 15 Oct 2018, 10:33 am

வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் மருத்துவ பரிசோதனை எடுக்க வேண்டும்: சின்மயி

சந்தி சிரித்தபின் சிந்திக்கிறார் வைரமுத்து: தமிழசை காட்டம்!!

undefined

பாடகி சின்மயி என்மீது பாலியல் வழக்கு தொடரந்தால் சந்திக்க தயாராக உள்ளேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
Samayam Tamil vairamuthu


கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வைரமுத்து, தற்போது வீடியோ மூலம் சின்மயிக்கு பதிலளித்துள்ளார்.


இது குறித்து வீடியோ மூலம் வைரமுத்து கூறியதாவது:
'என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையானவையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடரலாம். சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும் அறிவுலகத்தின் ஆண்டோர்களோடும் கடந்த ஒரு வாரமாக கலந்தாலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்துள்ளேன். எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நீங்கள் வழக்கு போடலாம். சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவரா கெட்டவரா என்பதை இப்போது முடிவு செய்யவேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலை வணங்குகிறேன்'.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி