ஆப்நகரம்

சரவணன் மீனாட்சி சீரியல் தாக்கம்: செல்ஃபி மோகத்தால் இளம்பெண் மரணம்!

​செல்ஃபி எடுக்க முயன்று கிணற்றுக்குள் தவறிவிழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பட்டாபிராம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Nov 2019, 10:53 am
ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுத்து பெரும் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகிவருகிறது. சமூகவலைதளங்களில் தங்களது புகைப்படங்களுக்கு லைக்ஸ் பெறலாம் என்ற ஆசையில் உயிரை பணயம் வைக்கின்றனர் பலர்.
Samayam Tamil சரவணன் மீனாட்சி சீரியல் தாக்கம்: செல்ஃபி மோகத்தால் இளம்பெண் மரணம்!


திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அப்பு, மெர்ஸிக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. இன்னும் சில தினங்களில் திருமணம் என்பதால் இருவரும் சேர்ந்து வலம் வந்துள்ளனர்.

இளம்பெண்ணுடன் பழகி திருமணத்துக்கு மறுத்த ஆட்டோ ஓட்டுநர் கொலை!

இந்நிலையில் செம்மஞ்சேரி வயல் பகுதியில் உள்ள கிணற்றுக்குள் இறங்கி செல்ஃபி எடுக்க முயன்று இருவரும் தண்ணீரில் மூழ்க மெர்ஸி பலியானார். அங்கிருந்த விவசாயி ஒருவர் சமயோஜிதமாக செயல்பட்டதால் அப்பு காப்பாற்றப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அயன் பட பாணியில் கடத்தல்: 50 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

சிகிச்சைக்குப் பின் அப்பு சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் விளக்கியுள்ளார். ‘சரவணன் மீனாட்சி’ தொலைக்காட்சி தொடரில் வருவது போல கடைசி படிகட்டில் இருந்து தண்ணீரில் காலை நனைக்கலாம் என மெர்ஸி கூறியுள்ளார். தனக்கும் நீச்சல் தெரியாது என அப்பு மறுத்துள்ளார். பின்னர் மெர்ஸி வற்புறுத்த கீழே சென்று செல்ஃபி எடுத்துள்ளனர். பின்னர் மேலே ஏறிவரும் போது மெர்ஸி கால் தடுமாறி அப்பு மீது விழ இருவரும் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளனர்.

அப்போது விவசாயி ஒருவர் உள்ளே விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அப்புவை மீட்டார். ஆனால் மெர்ஸியை மீட்க முடியாமல் போக அவர் கிணற்றுக்குள்ளே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவரை சுட்ட வழக்கு: விஜய் நீதிமன்றத்தில் சரண்!

செல்ஃபி மோகத்தால் இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி