ஆப்நகரம்

''அப்பவே நான் சொல்லிருக்கேன் கேக்கல.. காதலனுடன் சேர காதலியின் போராட்டம்..!!

சேலம் அருகே காதலனுடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் ஒருவர் காதலனின் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

Samayam Tamil 31 Aug 2019, 4:50 pm
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. கூலி தொழிலாளியான இவருக்கு கவுசல்யா என்ற மகள் உள்ளார். பட்டதாரியான இவர் அதே பகுதியில் உள்ள பூபதி என்பவரை ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
Samayam Tamil 6


இவர்களது காதல் விவகாரம் பூபதியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும் பூபதியை கண்டித்துள்ளனர். தங்களது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கவுசல்யா பூபதியின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் கவுசல்யாவை கண்டித்தது மட்டுமில்லாமல் தரை குறைவாகவும் பேசியுள்ளனர்.

இது மட்டுமில்லாமல் பூபதி கவுசல்யாவிடம் பழகுவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் பூபதிக்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்துவருவதால் இதுகுறித்து கவுசல்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், காவல் நிலையத்தில் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் காதலனுடன் சேர்த்து வைக்க கோரி கவுசல்யா பூபதியின் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

காதலுக்கு நிச்சயம் எதிர்ப்புகள் வரும் என்று பூபதியிடம் கவுசல்யா ஆரம்ப நாட்களிலேயே கூறியிருக்கிறார். ஆனால் பூபதியோ பிரச்சனைகள் வந்தால் பார்த்துக்கொள்வோம் என்றவாறு கவுசல்யாவை சமாதானம் செய்துள்ளார்.

கடைசியில் ஆதரவின்றி வீட்டை விட்டு வெளியேறி காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி