ஆப்நகரம்

சீட் கிடைக்கல; தூக்கில் தொங்கி சாவு - நீட் தேர்வால் தமிழகத்தில் பறிபோன மற்றொரு உயிர்!

நீட் தேர்வு எழுதி, மருத்துவப் படிப்பிற்கு சீட் கிடைக்கவில்லை என்ற விரக்தியால் மற்றொரு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Samayam Tamil 2 Aug 2019, 12:08 pm
மருத்துவப் படிப்பிற்கு நாடு முழுவதும் நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தமிழகப் பாடத் திட்டம் இல்லாததால், ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.
Samayam Tamil Suicide


இதனால் ஏற்படும் விரக்தியால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மற்றொரு கோர சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அட்டாக் பாண்டி மனைவிக்கு இப்படியொரு பிரச்சனை- உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பெரம்பலூர் அரசு பேருந்து நடத்துநராக இருந்து ஓய்வு பெற்றவர் செல்வராஜ். இவரது மகள் கீர்த்தனா. இவர் கடந்த ஆண்டு பிளஸ் டூ முடித்தார். அதில் 1053 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

மருத்துவப் படிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர், 2018ல் நீட் தேர்வு எழுதினார். அதில் 202 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தார். இதனால் மருத்துவராகும் கனவு பறிபோனது. ஆனால் கீர்த்தனா விடவில்லை.

Also Read: தமிழகத்தில் விழிபிதுங்கும் தேர்தல் பிஸினஸ்; தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் பிரசாந்த் கிஷோர்!

ஓராண்டு முழுவதும் நீட் தேர்விற்கு பயிற்சி எடுத்தார். 2019ல் நடந்த நீட் தேர்வு எழுதி 384 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தார். இதனால் மீண்டும் மருத்துவராக முடியாமல் போனது.

அதேசமயம் இவரது தோழி ஒருவர் பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்று, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ சீட்டை பெற்றுள்ளார். இதனால் தனது நிலையை கண்டு வேதனையில் இருந்துள்ளார்.

Also Read: ரூபாய் நோட்டுகளில் சாவித்ரி படம்! விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை!

இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சூழலில் ஃபேனில் தூக்கு போட்டுக் கொண்டு கீர்த்தனா தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி