ஆப்நகரம்

ஓபிஎஸ் உடன் செல்பி எடுக்க போட்டா போட்டி; மதுரையில் குவிந்த இளம் பெண்கள்!

மதுரை: துணை முதலமைச்சர் உடன் இளம் பெண்கள் செல்பி எடுக்க ஆர்வம் காட்டிய விஷயம் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 27 Jan 2019, 3:33 pm
திருப்பரங்குன்றம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே.போஸின் மகன் திருமணம் மதுரையில் நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Samayam Tamil OPS Selfie


இருவரும் மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடன், ஏராளமான இளம் பெண்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் குழந்தைகள், பெரியவர்களும் செல்பி எடுத்துச் சென்றனர்.

அவரும் பொறுமையாக செல்பி எடுத்துக் கொள்ள அனுமதித்தார். இதையடுத்து நடைபெற்ற ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். பலர் ஓ.பன்னீர்செல்வம் உடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டிய விஷயம், அவருக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதைக் காட்டுவதாக கூறுகின்றனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இவருக்கு தேனி, பெரியகுளம், மதுரை, விருதுநகர் பகுதிகளில் அதிக தொண்டர்கள் இருக்கின்றனர்.

அடுத்த செய்தி