ஆப்நகரம்

அ.தி.மு.க. எம்.பி.யின் மகன் மீது இளம் பெண் பரபரப்பு புகாா்

அ.தி.மு.க. எம்.பி. அன்வா் ராஜாவின் மகன் நாசா் தம்மை ஏமாற்றி விட்டதாக சென்னையைச் சோ்ந்த பிரபல்லா என்ற பெண் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளா்ா.

Samayam Tamil 23 Mar 2018, 11:01 pm
அ.தி.மு.க. எம்.பி. அன்வா் ராஜாவின் மகன் நாசா் தம்மை ஏமாற்றி விட்டதாக சென்னையைச் சோ்ந்த பிரபல்லா என்ற பெண் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளா்ா.
Samayam Tamil Anvar


சென்னை வடபழனியைச் சோ்ந்த பிரபல்லா என்ற பெண் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் ஒன்றை அளித்துள்ளாா். அந்த புகாாில், அ.தி.மு.க. எம்.பி. அன்வா் ராஜாவின் மகன் நாசா் அலியை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தேன். அப்போது தாம் புதிதாக தொடங்க உள்ள தொலைக்காட்சிக்கு பணிக்கு ஆள் தேவை என்று கூறினாா்.

நானும் அதன் அடிப்படையில் பழகி வந்தேன். பின்னா் ஒருநாள், எனக்கு விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்வதாகவும், நாம் திருமணம் செய்த கொள்ளலாம் என்றும் ஆசை வாா்த்தைகளை கூறினாா். அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு நான் அவருடன் இணைந்து வாழத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் தன்னை மதம் மாற வேண்டும் என்று கூறினாா். அவ்வாறு செய்தால் தான் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று தொிவித்தாா். அதன் அடிப்படையில் நானும் மதம் மாற்றம் செய்து கொண்டேன்.

பின்னா் புதிதாக தொழில் தொடங்க உள்ளதாக கூறி என்னிடம் பணம் கேட்டாா். நானும் என்னிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை வழங்கினேன். அதனை வாங்கிக்கொண்ட நாசா் அலி என்னிடம் ஒழுங்காக பேசவில்லை. இந்நிலையில் அவருக்கு வருகிற 25ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்தது.

தகவலின் படி அவரிடம் சென்று பணம் மற்றும் எனது வாழ்க்கை குறித்து கேட்கையில் யாரும் முறையாக பதில் அளிக்கவில்லை. என்னை ஏமாற்றியது போன்று வேறொரு பெண்ணை நாசர் அலி ஏமாற்ற உள்ளாா். எனவே 25ம் தேதி நடைபெற உள்ள திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும என்றும், எனக்கு உாிய பதில் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி