ஆப்நகரம்

இந்த காலத்திலும் இப்படியா? இளம் காதல் ஜோடி தற்கொலை முயற்சி... வைரலாகும் வீடியோ

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த இளம் காதல் ஜோடிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Sep 2019, 8:54 pm
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரும் ஆம்பூர் நகரைச் சேர்ந்த நீலாம்பரி என்பவரும், சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரியும் போது காதலித்துள்ளனர்.
Samayam Tamil ssa


இருவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரிய வர, இருவரின் பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இளம் காதல் ஜோடி, போளூர் சம்பத்கிரி மலையிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.

https://videoplayer.indiatimes.com/v2/embed.html?apikey=tamilweba5ec97054033e061&videoId=1xnts1vo6o&poster=&height=360&width=640

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த இளைஞர்கள், உடனே மலை உச்சிக்கு சென்று அருண்குமார் மற்றும் நீலாம்பரியை தற்கொலை முயற்சியிலிருந்து தடுத்து நிறுத்தினர். அத்துடன் நீலாம்பரியை அவர்கள் குண்டுகட்டாக தங்களின் தோள்களில் சுமந்து மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர்.

இதனால், உயிரை மாய்த்து கொள்ளவிருந்த காதல் ஜோடி சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். தகவலறிந்த போளூர் போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி