ஆப்நகரம்

நீலகிரியில் பயங்கரம்: பெண் படுகொலை, 4 வயது குழந்தை உயிருக்கு போராட்டம்!

கோத்தகிரியின் ரோஸ் காட்டேஜ் பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 30 Oct 2018, 8:46 pm
கோத்தகிரியின் ரோஸ் காட்டேஜ் பகுதியில் வசித்து வருபவர் லோகேஸ்வரி . இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் துபாயில் வேலை செய்யும் ராஜேஸ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
Samayam Tamil 6


இந்நிலையில் லோகேஷ்வரியின் தாய் வசந்தா, அவரைக்காண அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். பல முறை காலிங் பெல்லை அடித்தும், கதவை தட்டிய போதும், லோகேஷ்வரி கதவை திறக்கவில்லை.

இதையடுத்து கதவு இடைவேளை வழியாக ரத்த வருவதைப்பார்த்த, வசந்தா, அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வசந்தா போலீஸாருக்கு தகவல் அனுப்பினார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு, லோகேஸ்வரி, மற்றும் 4 வயது மகன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததனர். அவர்கள் அருகில் இருந்த கத்தரக்கோல் கிடந்தது. இதையடுத்து லோக்கேஸ்வரியின் மொபைல் போனை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் 4 வயது குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி