ஆப்நகரம்

​அக்காவின் மாப்பிள்ளையை தங்கச்சி திருமணம் செய்ததால் பரபரப்பு! புதுக்கோட்டை சம்பவம்

புதுக்கோட்டை அருகே அக்காவால் நின்று போன திருமணம் தங்கையால் மீண்டும் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Dec 2020, 8:44 pm
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் ராஜ்குமார் (30). இவருக்கும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் வரன் பேசி முடித்துள்ளனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயம் முடிந்து நேற்று திருமணத்தை நடந்த ஏற்பாடு செய்தனர். அதன்படி, ஆலங்குடியில் உள்ள கோவிலில் திருமண விழா களைகட்டியது.
Samayam Tamil marriage twist


உறவினர்கள், நண்பர்கள் சார்பில் மணமக்களை வாழ்த்தி பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முகூர்த்தத்துக்கு தயாராகி கொண்டிருந்த மணப்பெண் திடீரென மாயமாகியுள்ளார். செய்தியை கேட்ட மணமகன் வீட்டார் திருமண விழாவை ரத்து செய்துவிட்டு மணமகளின் வீட்டுக்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, வேறொருவரை காதலித்து வந்த மணப்பெண் திருமணத்துக்கு முன்னதாக சென்று விட்டதாக பெண்ணின் வீட்டார் தெரிவித்தனர். பெண் வீட்டாரின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய மணமகன் குடும்பம் அடுத்து நடக்க வேண்டியவை குறித்து ஆலோசித்தனர். அப்போது, மணமகளுடைய இளைய சகோதரியான ஆசிபாவுக்கு 19 வயது ஆவதால் ராஜ்குமாருக்கு அவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

முதல்வர் பழனிசாமியை மிரட்டும் சுப்பிரமணியன் சுவாமி!

அதற்கு இரு தரப்பிலும் பச்சை கொடி பறந்ததால் உடனே ராஜ்குமாருக்கும், ஆசிபாவுக்கும் அதே கோவிலில் வைத்து திருமணம் நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து ஆலங்குடியில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றி, இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர்.

மணமகள் ஓடி விட்டதால் நின்று போகவிருந்த திருமணம் தங்கையால் மீண்டும் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நமது வாழ்க்கையில் திருப்பங்கள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

அடுத்த செய்தி