ஆப்நகரம்

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மாணவருக்குச் சிறை

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து கூறிய இளைஞர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

TNN 23 Jul 2017, 12:38 am
கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து கூறிய இளைஞர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
Samayam Tamil youngster arrested after supporting kathiramangalam protest
கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மாணவருக்குச் சிறை


தஞ்சை மாவட்டம் நெடுவாசலிலும் புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இச்சூழலில் கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக பேஸ்புக்கில் கருத்து கூறிய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார்.

கடந்த 20ஆம் தேதி, கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்று பேஸ்புக்கில் கருத்து கூறியிருந்தார். இதனை காரணம் காட்டி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக முழக்கமிட்ட கல்லூரி மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி