ஆப்நகரம்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 4 லட்சம் மோசடி!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்ததாக கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் கரூரை சேர்ந்த இளைஞர் புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 2 Jan 2019, 6:23 pm
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்ததாக கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் கரூரை சேர்ந்த இளைஞர் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil TN Government job


கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கோவையில் கடந்த 2015ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய போது கோவைபுதூரை சேர்ந்த ஹரிநாராயணன் என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அப்போது, ஹரிநாராயணன் தனது தந்தை ராதாகிருஷ்ணனுக்கு அரசியலில் மேலிடத்தில் நல்ல செல்வாக்கு உள்ளதாகவும், பொதுப்பணித்துறையில் அரசுப்பணி பெற்றுத்தருவதாகவும் அதற்கு ரூ.4லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளார்.
பணத்தை கொடுத்தவுடன் உடனடியாக வேலை கிடைக்குமென ராதாகிருஷ்ணன் சொன்னதை அடுத்து, வங்கி மற்றும் நேரடியாக ரூ.4லட்சம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து 3ஆண்டுகளாகியும் பணியையும், பணத்தையும் கொடுக்காமல் இருந்து வந்ததையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரகாஷ், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி நம்பிக்கை மோசடி ஹரிநாராயணன் மற்றும் அவரது தந்தைராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.

அடுத்த செய்தி