ஆப்நகரம்

தினகரனின் போராட்டத்தில் பேனர் அகற்றிய வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து டிடிவி தினகரன் நடத்திய போராட்டத்தின் போது பேனரை அகற்றிய வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளார்.

Samayam Tamil 23 Apr 2018, 3:16 am
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து டிடிவி தினகரன் நடத்திய போராட்டத்தின் போது பேனரை அகற்றிய வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளார்.
Samayam Tamil TTV


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிடிவி தினகரன் தலைமையில் கடந்த சனிக்கிழமை திருச்சியின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடந்தது. இதனையொட்டி, மாவட்ட ஆட்சியர் சாலை, சரவணா ஸ்டோர்ஸ் சாலை ஆகியவற்றின் இருபுறங்களிலும் 50க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், போராட்டம் முடிந்த பிறகு சாலையின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டிருந்த பேனர்களை எடுக்கும் பணியில் புதூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (28) என்பவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக, நந்தகுமார் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதையடுத்து, நந்தகுமார் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி