ஆப்நகரம்

200 ரூபாய்க்காக கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர் கைது!

கன்னியாகுமரியில் 200 ரூபாய்க்காக கர்ப்பிணி மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 27 Dec 2018, 5:44 pm
கன்னியாகுமரியில் 200 ரூபாய்க்காக கர்ப்பிணி மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil prisoner-in-prison_e1a0b490-a3c8-11e8-9345-8d51f8ed9678


கன்னியாகுமரியை சேர்ந்தவர் மணிகண்டன் . இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி சுபிதா தற்போது மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு சுபிதாவிடம் சண்டை போடுவார். மனைவி சுபிதா மற்றும் குழந்தைகளை அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மணிகண்டன் செய்த கொடுமைகளை தாங்க முடியாமல், அவரது தாய் சில வாரங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் நேற்று வீட்டுக்கு வந்த மணிகண்டன், அவர் வீட்டில் வைத்த 200 ரூபாயை காணவில்லை என்று மனைவியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். மனைவி சுபிதா தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறவே ஆத்திரத்தில் அவரை அடித்தே கொன்றுள்ளார் மணிகண்டன்.

தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுபிதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி