ஆப்நகரம்

ஒரு கோடி விதைப்பந்துகள் தூவ திட்டம் : இளைஞர்கள் அமைப்பு புது முயற்சி!

தமிழகத்தில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விதை பந்துகளை தூவும் முயற்ச்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பூவி வெப்பமடைவதை தடுப்பதோடு, மழை வளத்தை பெருக்குவதே விதை பந்துகள் தூவுவதின் நோக்கம். திருவாரூர் மாவட்டத்தில் 5000 விதைப்பந்துகள் விதைக்கப்பட்டுள்ளன.

TOI Contributor 19 Jun 2017, 2:34 pm
திருவாரூர்: தமிழகத்தில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விதை பந்துகளை தூவும் முயற்ச்சியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பூவி வெப்பமடைவதை தடுப்பதோடு, மழை வளத்தை பெருக்குவதே விதை பந்துகள் தூவுவதின் நோக்கம். திருவாரூர் மாவட்டத்தில் 5000 விதைப்பந்துகள் விதைக்கப்பட்டுள்ளன. இந்தாண்டுக்குள் தமிழகம் முழுவதும் 1 கோடி விதைப்பந்துகள் தூவ இருப்பதாக இளைஞர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil youth party palnned to spary 1 crore seeds all over tamilnadu
ஒரு கோடி விதைப்பந்துகள் தூவ திட்டம் : இளைஞர்கள் அமைப்பு புது முயற்சி!


5 பங்கு மணலும் 3 பங்கு சாணமும், தேவையான அளவு தண்ணீரும் கலந்து புங்கை மற்றும் புளியம் விதைகளை வைத்து விதை பந்து உருவாக்கப்படுகிறது. தமிழகத்தில் காடுகளை அதிகரிக்கும் நோக்கமாக தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் விதைபந்துகளை இளைஞர்கள் அமைப்பினர் தூவி வருகின்றன. இதே போல் மதுரையில் இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்கள் ஏரிகளில் ஆய்வு மேற்கொண்டு ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சீமைக்கருவேல மரங்களை அகற்றவும், 50 ஆயிரம் விதைப்பந்துகள் தூவி மரம் வளர்க்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி