ஆப்நகரம்

பாத்ரூம் சென்ற இடத்தில் பெண்களை பலாத்காரம் செய்ய முயற்சி; இளைஞர்களின் அதிர்ச்சி செயல்!

இயற்கை உபாதைக்காக ஓடைக்குச் சென்ற பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த இளைஞர்களின் செயலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Apr 2019, 6:35 pm
அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா காந்தி. இவரது மருமகள் ரஞ்சிதா. இவர்கள் இருவரும் நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
Samayam Tamil Rape


அப்போது இந்திரா காந்தி தனக்கு வயிறு வலிப்பதாக கூறி, இயற்கை உபாதை கழிக்க அருகிலுள்ள ஓடைக்குச் சென்றுள்ளார். அப்போது ரஞ்சிதா ஓடையின் மேம்பாலத்தின் மீது அமர்ந்திருந்தார்.

இந்நிலையில் அப்பகுதியில் மறைந்திருந்த 3 இளைஞர்கள், இந்திரா காந்தியின் வாயை பொத்தி இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தனர். அப்போது அவர் கூச்சலிடவே, தனது செல்போன் மூலம் சத்தம் கேட்ட இடத்திற்கு ரஞ்சிதா சென்று தேடினார்.

அப்போது ரஞ்சிதாவையும் தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். அவர் கூச்சலிடவே அந்த வழியே சென்ற சிலர், ஓடி வந்து இளைஞர்களை பிடிக்க முயற்சித்தனர். அவர்களில் ஒருவர் மட்டுமே பொதுமக்களிடம் சிக்கினார். மற்ற இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து பிடிபட்ட வாலிபரை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் டிஎஸ்பி இளஞ்செழியன் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தனியாக சென்ற பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த பலாத்கார முயற்சி சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பை நிலவி வருகிறது.

அடுத்த செய்தி