ஆப்நகரம்

கர்ப்பிணி மனைவியை பார்க்க இ-பாஸ் கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை!

மனைவியை பார்க்க இ-பாஸ் கிடைக்காத விரக்தியில் காஞ்சிபுரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 30 Jun 2020, 9:33 pm
தமிழகத்தை பொறுத்தவரை கொரனா ஊரடங்கு அமல்படுத்திய பின்னர் பொதுமக்கள் வெளியில் வரத் தடைவிதித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இறுதி சடங்கு, திருமணம், மருத்துவ சிகிச்சை பெறுவோர் வெளி மாவட்டங்களுக்கு செல்ல சில வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனுமதி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
Samayam Tamil இளைஞர் தற்கொலை
இளைஞர் தற்கொலை


வெளிமாவட்டங்களுக்கு செல்வோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து அவசர பாஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் ஆன்லைன் விண்ணப்பம் செய்து பாஸ் பெற்று செல்கின்றனர். ஆனால், இந்த இ-பாஸ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகிறது. சரியான காரணங்கள் இருந்தும் முறையாக ஆவணங்கள் இல்லாததால் ஏராளமானோர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

பள்ளத்துக்குள் தூக்கி வீசப்படும் கொரோனா சடலங்கள்: காங்கிரஸ் பிரமுகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!!

இதனிடையே, தமிழகத்தில் வருகிற ஜூலை 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து அறிவித்துள்ள தமிழக அரசு, அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும் எனவும் வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியை பார்க்க விரும்பியும், மகப்பேறு நேரத்தில் அவருடன் தங்கியிருக்க வேண்டியும் இ-பாஸ் விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால், அவருக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் விரக்த்தியில் இருந்த அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி