ஆப்நகரம்

சாகும் வரை உண்ணாவிரதம் : யுவராஜ் அறிவிப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

TNN 5 Mar 2016, 7:49 pm
சேலம் : கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
Samayam Tamil yuvaraj fasting in vellore jail
சாகும் வரை உண்ணாவிரதம் : யுவராஜ் அறிவிப்பு


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், நாமக்கல் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக, தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் தேடப்பட்டு , பின்னர் கடந்த அக்டோபர் 11-ந்தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.இதனைத தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் , திருச்செங்கோடு டி.எஸ்.பியாக இருந்த விஷ்ணுபிரியாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தன் மீது பொய் வழக்குகள் புனைந்திருப்பதாகவும் கூறி இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக கடிதம் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி