ஆப்நகரம்

கண்ணைக் கட்டிக்கொண்டு 32 கி.மீ. சைக்கிள் பயணம்... சாதனைப் படைத்த தஞ்சை மாணவன்!

10 வயது சிறுவன் கண்களை கட்டிக் கொண்டு 32.1 கிலோ மீட்டர் தூரத்தை 1மணி நேரம் 49 நிமிடம் 6 வினாடிகளில் சைக்கிளில் கடந்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளார்.

Samayam Tamil 6 Jan 2021, 11:34 pm
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டை பகுதியை சேர்ந்த மெய் ஆனந்த் - சித்திரவள்ளி தம்பதியரின் மகன் ஆசிய்வ் (வயது 10).
Samayam Tamil தஞ்சை சாதனை மாணவன்


ஆறாம் வகுப்பு படிக்கும் இவர் கடந்த 07.01.2020 அன்று பட்டுக்கோட்டை பெரியார் சிலையில் இருந்து பட்டுக்கோட்டை நகரம் மற்றும் புறவழி சாலைகள் வழியாக திருச்சிற்றம்பலம் சிவன் கோவில் வரை கண்களை கட்டிக் கொண்டு 32.1 கிலோ மீட்டர் தூரத்தை 1மணி நேரம் 49 நிமிடம் 6 வினாடிகளில் சைக்கிள் ஓட்டிச் சென்று இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இந்தச் சாதனையை ஏற்றுக்கொண்ட ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ். தற்போது அவரது சாதனையை அங்கீகரித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் சான்றிதழையும், பதக்கத்தையும் கொடுத்தார். இந்த நிகழ்வின்போது சார் ஆட்சியர் பாலசந்தர், பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர்.

தன் மகன் 100 கிலோமீட்டர் தூரம் என்ற இலக்குடன் கின்னஸ் சாதனை படைக்க உள்ளார் என்று ஆசிய்வின் தந்தை கூறினார். தனது மகன் கின்னஸ் சாதனை படைப்பதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி